அணுவாயுத விவகாரம் குறித்து மூனும் ஸியும் பேச்சு

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அணுவாயுத பதற்றம் குறித்து தென் கொரியாவின் புதிய அதி பரான மூன் ஜேவுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது கொரிய தீபகற் பத்தை அணுவாயுதமற்ற வட் டாரமாக்குவதே குறிக்கோள் என்றும் திரு ஸி சொன்னார். அணுவாயுதப் பிரச்சினை களை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அதுவே அனைவருக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். கொரிய தீபகற்பத்தின் அமை திக்கும் வளப்பத்துக்கும் தென் கொரியா உட்பட அனைத்து தரப் பினருடனும் சேர்ந்து செயல்படு வதையே சீனா விரும்புவதாகவும் சீன அதிபர் குறிப்பிட்டார். வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவது சீனாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!