ஹனோய்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் அதிரடியாக விலகியதால் உலகின் 40 விழுக் காடு பொருளியலை உள்ளடக்கும் 12 பசிபிக் நாடுகளுக்கு இடை யிலான 'டிபிபி' எனும் வர்த்தக ஒப்பந்தம் கேள்விக்குறியாகி விட்டது. இந்நிலையில் டிபிபிக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட ஹனோயில் நேற்று கூடிய ஆசிய பசிபிக் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். இதில் இடம்பெற்றுள்ள எஞ்சிய உறுப்பு நாடுகள், நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தகத்தை ஒப்பந்தம் மேம்படுத்தும் என்று நம்புகின்றன.
தற்போது ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதிய டிபிபி-II ஒப்பந்தத் துக்கு முன்னணி வகிக்கின்றன. சிங்கப்பூரும் இதில் இடம்பெற்றுள் ளது. ஹனோயில் காலை நேர பரபரப் புக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக் கிலே, "டிபிபி-II ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வழிகள் கண் டறியப்படும்," என்றார். அதே சமயத்தில் அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அந்நாடு மீண்டும் இணைவதற்கான ஒத்து ழைப்புகளை எந்நேரத்திலும் வழங்க வர்த்தக பிரதிநிதிகள் ஒப்புதல் தெரிவித்தனர். இதற்கிடையே ஹனோயில் பேசிய அமெரிக்க வர்த்தக அமைச் சர் ராபர்ட் லைட்டிசர், "டிபிபி விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவில் மாற்றமில்லை," என்று கூறினார்.
ஹனோயில் கூடிய ஆசிய பசிபிக் நாடுகளின் வர்த்தக அமைச் சர்களில் சிலர். (இடமிருந்து பின்பக்கம்) சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங், நியூசிலாந்து அமைச்சர் டோட் மெக்கிலே, மலேசிய அமைச்சர் முஸ்தபா முஹமட், (இடமிருந்து முன்பக்கம்) பெரு அமைச்சர் எட்வர்டோ ஃபெரெயிரோஸ், மெக் சிகோவின் இல்டெஃபோன்சோ குவாஜார்டோ. படம்: ராய்ட்டர்ஸ்