பேங்காக்: பேங்காக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 24 பேர் காயம் அடைந்தனர் என்று தாய் லாந்து போலிசார் நேற்று தெரி வித்தனர். அந்த மருத்துவமனையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மருந்து களைப் பெறுவதற்காகக் காத் திருந்தபோது குண்டு வெடித்தது என்று அவர்கள் கூறினர். "அது வெடிகுண்டுதான்," என்று தேசிய காவல்துறை துணைத்தலைவர் ஸ்ரீவாரா ரன் சிபிரஹாமனகுல் தெரிவித்தார். "சம்பவ இடத்தில் பேட்டரி, மின்சார கம்பிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் செயல் பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வரு கிறோம்," என்றார் அவர். கண்ணாடி உடைந்து சிதறிய தால் பெரும்பாலானவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சோதனையில் ஈடுபட்ட நிபுணர்கள். படம்: த நேஷன்