மலேசிய நெடுஞ்சாலையில் இறந்துகிடந்த குட்டி யானை

ஈப்போ: மலேசிய நெடுஞ்சாலை யில் குட்டி யானை ஒன்று பரி தாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. வாகனம் மோதி இந்த யானை மடிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து பேசிய தேசிய பூங்கா அதிகாரி ஒருவர், "இத் தகைய சம்பவங்கள் மிகவும் அரிது," என்று குறிப்பிட்டார். "வடகிழக்கு கிளந்தான் மாநிலத்தை மலேசியாவின் எஞ்சிய பகுதியுடன் இணைக் கும் கிழக்கு -மேற்கு நெடுஞ் சாலையை ஓட்டியுள்ள இயற்கை வாழ்விடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டுப் பகுதிகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது," என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நெடுஞ் சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத் தியுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி அளவில் கிரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய இரண்டு வயது யானை இறந்துகிடந்ததை கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'MEME' என்ற மலேசிய யானைகளின் வாழ்க்கைச் சூழல், நிர்வாக அமைப்பினர் கண்டுபிடித்தனர். சம்பவம் குறித்து பேசிய பேராக் வனவிலங்கு, தேசிய பூங்கா பிரிவின் இயக்குநர் லூ கியான் சியோங், "ஏற்கெனவே 'நெடுஞ்சாலையில் யானைகள் கடந்து செல்லும் இடம்' என்று வாகன மோட்டிகளை எச்சரிக்கும் அறிவிப்புப் பலகை களை நிறுவியிருக்கிறோம்," என்றார். இந்த விவகாரத்தில் குறிப்பாக இரவு, அதிகாலை நேரத் தில் வாகனமோட்டிகள் கவன முடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!