இந்தோனீசியாவில் பலத்த போலிஸ் பாதுகாப்பு

ஜகார்த்தா: நோன்புப் பெருநாளைக் கொண்டாட மில்லியன் கணக் கான இந்தோனீசிய மக்கள் ஆயத்தமாகி வரும் வேளையில் இத்தகைய விழா காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தோனீசியப் போலிசார் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தோனீசியப் போலிசார் அண்மையில் பயங்கரவாத கட்டமைப்பு ஒன்றுடன் தொடர் புடைய 36 இந்தோனீசியர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். கிழக்கு ஜகார்த்தாவில் கம்போங் மலாயு பகுதியில் உள்ள பேருந்து முனையத்தில் சென்ற மாதம் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்கு தலைத் தொடர்ந்து அவர்களை போலிசார் கைது செய்தனர்.

அவ்விரு குண்டு வெடிப்பு களில் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். கம்போங் மலாயு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று தேசிய போலிஸ் படைத் தலைவர் டிட்டோ கனர்வியன் செய்தியாளர்களிடம் கூறினார். ஜகார்த்தாவில் உள்ள போலிஸ் தலைமையகத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய டிட்டோ, கம்போங் மலாயு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் இந்தோனீசியாவில் உள்ள ஜேஏடி எனப்படும் ஜமா அன்ஷருட் டவ்லா பயங்கரவாத கட்டமைப்பின் ரகசிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!