கட்டுமானப் பகுதிகளில் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை

கோலாலம்பூர்: சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை களை தீவிரப்படுத்தியுள்ள நிலை யில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வெளிநாட்டு ஊழியர்கள் ஒளிந்துகொள்வதாக அதிகாரிகள் கூறினர். பல ஊழியர்கள் இவ்வாறு ஒளிந்துகொள்வதால் அவர்கள் வேலைக்கு வராமல் இருக்கக் கூடும் என்று முதலாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மலேசியாவில் வேலை செய் யும் வெளிநாட்டு ஊழியர்களுக் காக அவர்களின் முதலாளிகள் இ-அட்டை விண்ணப்பிப்பதற்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் விதித்திருந்த காலக்கெடு முடி வுற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களாக கட்டுமானப் பகுதி களில் அதிகாரிகள் சோதனை களை மேற்கொண்டு வருகின் றனர்.

மலேசிய அதிகாரிகளின் கைது நடவடிக்கையால் கட்டுமான மற்றும் நடுத்தர, சிறிய நிறுவனங் கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படு வதால் அங்கு வேலை செய் யும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு வர அஞ்சுவதாக முதலாளி ஒருவர் தெரிவித் துள்ளார். இதனால் தங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக் கப்படும் என்றும் அவர் சொன் னார்.

கிள்ளான், ஜாலான் காப்பார் பகுதியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது வெளிநாட்டு ஊழிர்கள் காத்திருக்கின்றனர். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!