வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கார் நிறுத்தும் இடம் ஒன்றில் காணப்பட்ட ஒரு லாரிக்குள் 9 பேர் இறந்து கிடந்ததாகவும் இன்னும் பலர் மயக்கநிலையில் காணப்பட்டனர் என்றும் அதி காரிகள் கூறினர். அந்த கண்டெய்னர் லாரிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். லாரியில் அடைத்து வைக்கப் பட்டிருந்தவர்கள் மெக்சிகோ நாட்டவர்கள் என்று கூறப் படுகிறது. அமெரிக்காவில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். போதிய காற்று வசதி இல்லாதது, கடும் வெப்பம் காரணமாக மூச்சுத் திணறி பலர் இறந்திருக்கலாம் என்று குடிநுழைவுத் துறை அதிகாரி களின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆட்களைக் கடத்தி வந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெக்சஸ் மாநிலத்தில் லாரிக்குள் 9 பேர் இறந்து கிடந்தனர்
25 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jul 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!