இங்கிலீஷ் கால்வாயில் இருக்கும் குவான்சே தீவிலிருந்து சிங்கப் பூருக்கு US$1.4 பில்லியன் (S$1.9 பில்லியன்) தொகையைச் சட்ட விரோதமாக மாற்றிய செயலில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் 81 பேரில் இந்தோனீசிய அரசாங்க அதிகாரிகள் யாரும் இல்லை என்று அந்த நாட்டின் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரச்சினைக்குள்ளாகி இருக் கும் அந்தத் தொகை, வர்த்தகர் களுக்குச் சொந்தமானது என்று இந்தோனீசியாவின் வரித் துறை தலைமை இயக்குநர் கென் விஜுஜியாஸ்டெடி திங்கட்கிழமை இரவு கூறினார்.
அந்தத் தொகை மாற்றப்பட்ட விவகாரம் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் என்பதும் அதற்கும் ராணுவத்திற்கும் தொடர்பு இல்லை என்பதும் பூர்வாங்க புலன்விசா ரணைகள் மூலம் தெரியவந்திருப்ப தாக அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் அந்த 81 பேரில் 62 பேர் இந்தோனீசியாவின் அண் மைய சிக்கலான வரி மன்னிப்புச் செயல்திட்டத்தில் சம்பந்தப்பட் டிருந்தார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.