லண்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கேய் ஸ்கிரிபாலை யும் அவரது மகள் யூலியாவையும் நச்சு ரசாயனப் பொருளைப் பயன் படுத்தி கொலை செய்ய மேற் கொள்ளப்பட்ட முயற்சி குறித்து விசாரித்துவரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று ஸ்கிரிபாலின் மனைவி, மகனின் கல்லறைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருந்த அவர்கள் ஸ்கிரி பாலின் வீட்டிலிருந்தும் சான்று களைச் சேகரித்தனர். பின்னர் அவரது மகனின் கல்லறையைச் சுற்றி நீல நிற கூடாரத்தை அமைத்தனர்.
முன்னதாக சம்பவ இடத்தி லிருந்த பொருட்களையும் வாக னங்களையும் அகற்ற ராணுவத் தின் உதவி கோரப்பட்டது என்று போலிசார் கூறினர். ஸ்கிரிபாலின் மனைவி லியூட் மிலா, 59, 2012ல் கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று தேசிய சுகாதார சேவையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவரது 43 வயது மகன் அலெக்சாண்டர் கடந்த ஆண்டு இறந்தார். தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ள ஸ்கிரிபாலையும் அவரது மகள் யூலியாவையும் பயங்கர மான ரசாயனப் பொருளைப் பயன் படுத்தி கொல்லும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.