கோலாலம்பூர்: சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியா சென்ற இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். சிங்கப்பூரில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்று கேள்விக்கணைகளுக்குத் தயங்காமல் பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் லீ சியன் லூங்கையும் சந்தித்துப் பேசினார். பின்னர் வெள்ளிக் கிழமை இரவு கோலாலம்பூர் புறப்பட்டார். மலேசியாவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. படம்: ஏஎஃப்பி