பெட்டாலிங் ஜெயா: தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து சரவாக்கின் நான்கு கட்சிகள் விலகியதைத் தொடர்ந்து அக் கூட்டணியில் அம்னோ இணைந் திருப்பதைவிட தனித்து செயல் படுவதே சிறந்தது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார். தேசிய முன்னணி கூட்டணி என்பது "முடிந்துபோன கதை" என்று குறிப்பிட்ட திரு நஸ்ரி, அக்கூட்டணி தற்போது கலைக்கப் படுவது நல்ல விஷயமாக இருக்கலாம் என்று கூறியதாக மலேசியா டுடே இணைய செய்தித் தளம் தெரிவித்தது.
தேசிய முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகா, மலேசிய சீனர் சங்கம், கெராக்கான் ஆகிய கட்சிகள் கடந்த மே 9ஆம் தேதி நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித் ததை அடுத்து தேசிய முன்னணி இனி வலுவான கட்சியாக வர முடியாது என்று திரு நஸ்ரி குறிப்பிட்டார்.