கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக் கும் இடையில் ரயில் இணைப்பை குறைந்த செலவில் மேம்படுத்து வதற்கான ஒரு யோசனை மலே சிய அரசிடம் தாக்கலாகி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் திட்டமிடப்பட்டு இருக்கும் அதி வேக ரயில் கட்டமைப்பை அமைப் பதற்கு ஆகும் செலவில் பாதித் தொகைகூட புதிய மலிவு திட்டத் திற்குத் தேவைப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள ரயில் கட்ட மைப்பை மேம்படுத்துவது அந்த யோசனையில் அடங்கும் என்று தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குறைந்த செலவிலான இந்தத் திட்டத்திற்கு 20 பில்லியன் ரிங் கிட் (S$6.8 பில்லியன்) செலவாகும். சிங்கப்பூர்=கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டத்திற்கு 60 பில்லியன் முதல் 70 பில்லியன் ரிங்கிட் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. மலேசியா 2016ல் சிங்கப்பூரு டன் கையெழுத்திட்ட அதிவேக ரயில் திட்டத்தை கைவிடும்பட்சத் தில் அந்த நாடு சிங்கப்பூருக்கு 500 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கவேண்டி இருக்கும்.