சோல்: பரம எதிரிகளான வட கொரியாவுக்கும் தென் கொரியா வுக்கும் இடையே தற்போது சுமூக உறவு நிலவுகிறது. இந்நிலையில் ஜப்பானிட மிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் இரண்டு நாள் போர் ஒத்திகைப் பயிற்சியை நேற்று தென்கொரியா தொடங்கியது. தென்கொரியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண் டாடும் டோக்டோ தீவில் அப்பயிற்சி நடைபெற்றது. இதே தீவை டேக்கேஷிமா என்று அழைக்கும் ஜப்பான், அத் தீவை தென்கொரியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள தாகக் கூறியுள்ளது. தென்கொரியாவுடனான ராணு வப் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறி வித்துள்ள வேளையில் ஜப் பானுக்கு எதிரான தென்கொரியா போர் ஒத்திகையை தொடங்கியுள் ளது.
தென்கொரியா மீது ஜப்பான் தாக்குதல் தொடுப்பது அரிது. ஆனால் 1986ல் முதல் முறை யாக ஜப்பானுக்கு எதிராக தென் கொரியா ராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. பின்னர் 2003ஆம் ஆண்டி லிருந்து ஆண்டுக்கு இரு முறை போர் ஒத்திகை பயிற்சியை தென் கொரியா நடத்தி வருகிறது.