சிலாங்கூர் முதலமைச்சராக அமிருதின் ஷாரி பதவி ஏற்பு

கோலாலம்பூர்: நான்கு ஆண்டுகள் சிலாங்கூர் முதலமைச்சராக இருந்த அஸ்மின் அலிக்குப் பதிலாக சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் அமிருதின் ஷாரி அப்பொறுப்பை ஏற்றுள்ளார். அலாம் ஷா அரண்மனையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு அமிருதின் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரது பதவி ஏற்பு சடங்கு நேற்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் நடைபெற்றது.

பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் திரு அமிருதின் காலை 8 மணிக்கே தன் துணைவியார் மாஸ்டியானா முகமதுவுடன் அரண்மனையை வந்தடைந்தார். அமிருதின், மாநில இளைஞர் மேம்பாட்டு, விளை யாட்டு, கலாசார, தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினரும் ஆவார். மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்ததை அடுத்து, திரு அஸ்மின் அலிக்கு பொருளியல் விவகார அமைச்சர் பொறுப்பு வழங்கப் பட்டது. அதை அடுத்து, சிலாங்கூரின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பல கணிப்புகள் வெளியாகி இருந்தன.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!