ஆஸ்திரேலியப் பிரதமர் பதவி விலக அதிகரித்துவரும் நெருக்குதல்

சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள் வதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதவி விலக மறுத்துள்ள திரு டர்ன்புல், அவரது கட்சி 2வது முறையாக தலைமைத்துவ பதவிக்கான வாக்கெடுப்பை இன்று நடத்தும் என்று அறிவித்துள்ளார். கேன்பராவில் திங்கட்கிழமை நடந்த முதல் வாக்கெடுப்பின்போது திரு டர்ன்புல் அதிக வாக்குகள் பெற்று பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆனால் அவரது மூத்த அமைச்சர்கள் மூவர் பதவி விலக முன்வந்ததைத் தொடர்ந்து அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைமைத்துவப் பதவிக்கான மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தற்போது பதவி விலகியுள்ள உள்துறை அமைச்சர் பீட்டர் டியுட்டன் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!