ரயில் திட்டச் செலவைக் குறைக்க முயன்ற சீனா

'இசிஆர்எல்' எனப்படும் கிழக்குக் கரை ரயில் திட்டத்திற்கான செலவைக் குறைக்க சீனா முற்பட்டபோதும் மலேசிய அமைச்சர்களின் முரணான கருத்துகளால் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கேள்விக்குறியாக இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ரயில் பாதை கட்டுமானத் திட்டத்தின் மதிப்பு மொத்தம் 67 பில்லியன் ரிங்கிட் (22 பில்லியன் வெள்ளி). இதனைப் பாதிவரை குறைக்க சீனக் குத்தகை நிறுவனம் 'சிசிசி' முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கம், 'சிசிசி'யுடன் ரயில் திட்ட ஒப்பந்தத்தில் இணைந்தது. கடந்தாண்டு மே மாதம் டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இந்த ஒப்பந்தம் நியாயமற்றது எனக்கூறி அதனை ஜூலையில் தற்காலிமாக ரத்து செய்தார்.

ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்து தாம் சீனாவின் புரிதலை நாடுவதாக டாக்டர் மகாதீர் செவ்வாய்க்கிழமை கூறினார். ஆனால் இதற்கு அடுத்த நாள், சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மலேசியா விரும்புவதாக மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பல மலேசிய அதிகாரிகள் தலையிட்டு தத்தம் கருத்துகளை வெளிப்படுத்தியதால் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகியுள்ளதாக அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்த சிலர் மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!