லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தன் மனைவியுடன் தனது சொந்த நாடான நெதர்லாந்திற்கு திரும்பிச் செல்ல விரும்புவதாகக் கூறி யுள்ளார். ரியட்சிக் என்ற அந்த இளைஞர் தற்போது சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள குர்தியர்களின் தடுப்பு நிலையத் தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஐஎஸ் குழுவுக்காக சண்டை யிட்டதை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர் தன் மனைவி ஷமீமா பேகத்துடன் நெதர்லாந்து திரும்பிச்செல்ல விரும்புவதாக பிபிசி செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஐஎஸ் குழுவிலிருந்து வெளியேற தான் பல தடவை முயன்றதாகவும் அவர் கூறினார். இவரது மனைவி பேகம் லண்டனிலிருந்து தப்பிச்சென்று சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்ந்தவர். சிரியாவில் பேகத்தை திருமணம் செய்துகொண்டது பற்றி ரியட்சிக் விவரித்தார். பேகம் சிரியாவுக்கு தப்பிச் சென்றபோது அவருக்கு வயது 15. தற்போது 19 வயதாகும் பேகம் தன் மகனை வளர்க்க பிரிட்டன் திரும்ப விரும்புவதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
ஐஎஸ் குழுவில் சேர்ந்த இளைஞர் மனைவியுடன் நெதர்லாந்து திரும்ப விருப்பம்
4 Mar 2019 09:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 09:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!