தேசிய முன்னணியில் பிளவு: புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஇகா, மசீச

மலேசியாவின் எதிர்த்தரப்பு தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கிய இரு கட்சிகள் அம்னோவைக் கைவிட்டு புதிய கூட்டணியை அமைக்கப்போவ தாக அக்கட்சிகளின் தலைவர் கள் தெரிவித்துள்ளனர்.
தனது நாடாளுமன்ற உறுப் பினர் ஒருவரின் இனவாதக் கருத்துகளை அம்னோ தலை வர்கள் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து இந்த முடிவிற்கு தாங்கள் வந்திருப்பதாக மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீனர் சங்கம் ஆகியவற்றின் தலை வர்கள் நேற்று கூறியதாக 'த ஸ்டார்' இணையச் செய்தி குறிப் பிட்டது.
தேசிய முன்னணியைக் கலைத்துவிட்டு புதிய கூட்ட ணியை அமைக்குமாறு கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்கூட்டத் திற்குப் பின் தாங்கள் யோசனை தெரிவித்திருந்ததாக மஇகா தலை வர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் மசீச தலைவர் வீ கா சியோங்கும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.
கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்க உடனடியாகக் கூட்டம் நடத்த தேசிய முன்னணி தலைமையை தாங்கள் அப்போது வலியுறுத்தியதாகவும் அறிக்கை யில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!