இலங்கையில் நடந்த வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு அதிகாரிகள் செயல்படுத்திய ஊரடங்கு நிறைவடைந்துள்ளது. தாக்குதலில் 290 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 500 பேர் காயமடைந்ததாகவும் அண்மை புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
கொழும்பில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தபோதும் அமைச்சர்களுக்கு அது தெரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தவீத் ஜமாத் என்ற அமைப்பு அந்தத் தாக்குதலை நடத்தபோவதாக அந்த எச்சரிக்கை குறிப்பிட்டது. மேலதிகாரிகளுக்கு அந்த எச்சரிக்கை தெரிவிக்கப்படாதது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று திரு விக்ரமசிங்க கூறினார்.
(வெடிப்புச் சம்பவத்தைக் காட்டும் இந்தக் காணொளி, கார் ஒன்றுக்குள் இருந்து எடுக்கப்பட்டது)