எட்டு நாடுகளைக் கொண்ட வட துருவ மன்றத்தில் சீனா உறுப்பு நாடாக இல்லாததால் அது மன்றத்தின் வட துருவ நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த மன்றத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஃபின்லாந்தின் ரொவானியேமில் வரும் திங்கட்கிழமை நடைபெறும் சந்திப்பில் இணைவர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இதில் கலந்துகொள்கிறார்.
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவை மன்றத்தின் உறுப்பினர்கள். சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் மன்றத்தின் கவனிப்பாளர்களாக உள்ளன.
"வட துருவத்தில் அமைந்துள்ள எட்டு உறுப்பு நாடுகள்தான் வட துருவத்தை நிர்வகிக்க முடியும். இந்த வழிமுறையில் தனக்குப் பங்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு வட துருவ நிர்வாகத்தில் தலையிட சீனா முயன்று வருவதை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று அந்த அமெரிக்க அதிகாரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.