பிரதமர் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கப்போவதில்லை என்று டாக்டர் மகாதீர் முகம்மது கோடிகாட்டியுள்ளார்.
"பெரும்பாலான திருத்தங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் செய்ய உள்ளோம். அதன் பிறகு மற்றவர்கள் எதிர்நோக்கவேண்டிய பிரச்சினைகள் குறையும் என நான் நம்புகிறேன்," என்று பிரதமர் மகாதீர் செய்தியாளர் கூட்டத்தின் முன்னிலையில் தெரிவித்தார்.
அவர் கூறியது இன்று முதல் இரண்டு ஆண்டுகளா அல்லது பிரதமர் பதவியேற்றது முதல் இரண்டு ஆண்டுகளா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது டாக்டர் மகாதீர், "இரண்டு ஆண்டுகளா அல்லது மூன்று ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இடைக்கால பிரதமர்" என்று பதிலாளித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் நிர்வாகத்தின் முதல் 12 மாதங்களாக ஊழல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறும் 94 வயது டாக்டர் மகாதீர், இனி பொருளியல் மீது கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார்.