'வெய்போ' சமூகத் தளத்தில் தன்னையே நேரலைக் காணொளி எடுத்துக்கொண்டு உயிருள்ள 'அக்டோபஸ்' கணவாயைச் சாப்பிட முயன்றாள் ஒரு பெண். ஆனால் அந்த 'அக்டோபஸ்', தனது கால்களால் அந்தப் பெண்ணின் முகத்தை இரும்புப் பிடியாகப் பற்றிக்கொண்டது.
அலறிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த அந்தப் பெண், தனது முகத்தில் ஒட்டியிருந்த 'அக்டோபஸைப்' பிரித்திழுக்க பல முறை முயன்றார். சிறிது நேரம் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு அந்த அக்டோபஸின் பிடியிலிருந்து விடுபட்டார்.
தன்னை விழுங்க வந்த பெண்ணின் கன்னத்தைச் செல்லமாக கடித்து அங்கு சிறிய வடு ஒன்றைப் பரிசாக விட்டு வைத்தது அக்டோபஸ். முகம் சிவந்துப் போன அந்தப் பெண்ணின் அழுகை ஓய்ந்தபாடில்லை....