ஐரோப்பாவில் மாடுகளுக்கு முத்தமிடும் சவாலுக்கு எதிராக ஆஸ்த்ரிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தச் சவாலின் படி இணையவாசிகள் தாங்கள் மாடுகளுக்கு முத்தம் இடுவதைக் காட்டும் படங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் நன்கொடை அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதே அந்தச் சவாலின் இலக்கு.
ஆயினும், இந்தச் சவால் ஆபத்தானது என்று ஆஸ்த்ரி யாவின் வேளாண்மை அமைச்சர் எலிசபத் கோஸ்டிங்கர் தெரிவித் தார். மாடுகள் காட்சிப்பொருள் அல்ல என்று கூறிய திருவாட்டி கோஸ்டிங், மாடுகள் கன்றுகளைப் பாதுகாக்க முற்படும்போது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றார்.