வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை அதி காரபூர்வமாகத் தொடங்கியுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை ஃபுளோரிடாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பேசிய அவர் தனது நிர்வாகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
வலுவான அமெரிக்கப் பொரு ளியல், நேர்த்தியான வர்த்தகக் கொள்கைகள், குடிநுழைவு பிரச்சி னைகளில் கடுமையான அணுகு முறை போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவைத் தொடர்ந்து சிறந்த நிலையில் வைத்திருப்பேன் என்றார் அவர்.
“அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது தவணைக்குப் போட்டியிடுவதற்காக இன்று உங்கள் முன்பு அதிகாரபூர்வமாக பிரசாரத்தைத் தொடங்கியிருக் கிறேன். “நமது பொருளியல் வளர்ச்சி யைக் கண்டு உலக நாடுகள் பொறாமைப்படுகின்றன,” என்று திரு டிரம்ப் கூறினார். அப்போது ஓர்லாண்டோ அரங் கில் திரண்டிருந்த 20,000க்கும் மேற்பட்ட அவருடைய ஆதரவாளர் கள் ஆரவாரம் செய்தனர்.