மலேசியாவில் முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் சமூக ஊடக பிரசாரத்தை திரு அன்வார் இப்ராகிம், “ஆரோக்கியமற்ற செயல்,” என்று வர்ணித்துள்ளார்.
அண்மையில் மலேசியாவில் முஸ்லிம்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு ‘முன்னுரிமை அளிப்பது’, ‘ஆதரவளிப்பது’ ஆகியவற்றின் தொடர்பிலான பிரசாரம் சமூக ஊடகங்களில் காணப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதோர் ‘ஹலால்’ சின்னத்தை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர்.
அதன் தொடர்பில் “ஹலால் சான்றுடைய பொருட்களை விளம்பரப்படுத்த விரும்பினால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால், சர்ச்சைக்குரிய விதத்தில் இவ்வாறு செய்ய முற்பட்டால் அது ஆரோக்கியமானதல்ல,” என்று திரு அன்வார் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) குறிப்பிட்டார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதில் உடன்பாடு இல்லை என கடந்த வெள்ளிக்கிழமை மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். இந்தப் புறக்கணிப்பைக் கண்டிக்குமாறு அம்னோ, பாஸ் கட்சிகளை மலேசிய நிதி அமைச்சார் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.