புகைமூட்டத்தைப் பற்றி புலம்பும் மலேசியர்கள்

இந்தோனீசியாவின் பனைத்தோட்டங்களில் எரியும் தீயிலிருந்து கிளம்பும் புகைமூட்டம் குறித்து மலேசியர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர். வறண்ட பருவத்தில் பனைமரம், பேப்பர் மரம் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு இந்தோனீசியாவில் காட்டு மரங்கள் தீயில் இடப்படுகின்றன. இந்தத் தீயிலிருந்து வெளிவரும் புகையைத் தெற்கிலிருந்து வீசும் காற்று சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தள்ளுவதால் அவற்றின் மக்கள் பல்வேறு விதமான சுகாதாரப் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

புகைமூட்டத்தால் தங்களுக்குத் தோல் அரிப்பு, தொண்டை வலி, சளி ஆகியவை ஏற்படுவதாக மலேசியர்கள் சிலர் டுவிட்டரில் கூறுகின்றனர்.மலேசியாவிலுள்ள எட்டு மாநிலங்களில் 21 இடங்களின் காற்றுத்தரம் சுகாதாரத்திற்குக் கெடுதலான அளவிற்கு எட்டியுள்ளதாக அந்நாட்டின் காற்றுத்தரக் குறியீடு காட்டுகிறது.

கடந்த சில வாரங்களாக, சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் ஏற்பட்ட அவசரநிலையின் காரணமாக இந்தோனீசியா ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை அனுப்பி தீயை அணைத்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை.

இந்தோனீசியாவின் அண்டை நாடுகள் பல தடவை முறையிட்டபோதும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகப் பலமுறை உறுதி கூறி ஒவ்வொரு முறையும் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறுகிறது இந்தோனீசியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!