புதுடெல்லி: பொருளாதாரம் தொடர்பான நேர்மையான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் ஏற்க மத்திய அரசு மறுப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், “தற்போது நாட்டில் பொருளாதாரத்தின் எந்த அம்சம்தான் சரியாகச் செயல்படுகிறது?” என்ற கேள்விக்கு, “ஒன்றும் இல்லை” என்று தாமே பதிலும் அளித்துள்ளார் சிதம்பரம்.
“நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் மிக மோசமான பொருளாதார நிர்வாகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
“இதன்பொருட்டு நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் காங்கிரஸ் வழிநடத்த வேண்டும்,” என்றும் ப.சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார்.
திகார் சிறையில் இருந்தபடி மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ப.சிதம்பரம். அவரது கருத்துகளை அவரது குடும்பத்தார் இணையத்தில் வெளியிடுகின்றனர்.