‘டிரம்ப்புக்கு எதிரான வழக்கு தேர்தல் குறுக்கீடாகும்’

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஏற்படும் மிகப் பெரிய குறுக்கீடாக அமையும் என்று அவரது வழக்கறிஞர்கள் செனட் சபையில் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க அமெரிக்கர்களுக்கு இருக்கும் உரிமை பறிக்கப்படும் என்று தற்காப்பு வழக்கறிஞர்களின் தலைவர் பேட் சிப்போலோனி தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்பை மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுப்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை அமரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கிடையே, உக்ரேனுக்கு நெருக்குதல் தந்து பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பாக அதிபர் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் சாத்தியம் மிகவும் குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!