அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஏற்படும் மிகப் பெரிய குறுக்கீடாக அமையும் என்று அவரது வழக்கறிஞர்கள் செனட் சபையில் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க அமெரிக்கர்களுக்கு இருக்கும் உரிமை பறிக்கப்படும் என்று தற்காப்பு வழக்கறிஞர்களின் தலைவர் பேட் சிப்போலோனி தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப்பை மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுப்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை அமரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கிடையே, உக்ரேனுக்கு நெருக்குதல் தந்து பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பாக அதிபர் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் சாத்தியம் மிகவும் குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.