லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தடியில் 3,350 டன் தங்கம் உள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.
சோன்பத்ரா மாவட்டத்தில் 52,806.25 டன் தாது இருப்ப தாகத் தெரியவந்துள்ளது.
ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும். ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.