நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு செல்வாக்கு கூடுகிறது

வெலிங்டன்: நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் செல்வாக்கு அதிகரித்துள்ளது கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

நியூஸ்/கோல்மார் புருன்டன் நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சிக்கு 50 விழுக்காடு ஆதரவு இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இருந்தாலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் அக்கட்சி 59 விழுக்காடு ஆதரவு பெற்றிருந்தது.

முக்கிய எதிர்க்கட்சியான தேசிய கட்சிக்கு 38 விழுக்காடு ஆதரவு உள்ளது.

அண்மையில் தேசிய கட்சியின் தலைவர் மாற்றப்பட்டார். இதனால் அக்கட்சியின் செல்வாக்கு ஒன்பது விழுக்காடு கூடியுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் மூன்று புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிறைஸ்ட்சர்ச்சில் இருவரும் ரேடோருவாவில் ஒருவரும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மூவரும் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!