விக்டோரியாவில் கட்டுக்கடங்காத கிருமிப் பரவல்; தேசிய பேரிடர் நிலை அறிவிப்பு

கட்டுக்கடங்காத கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தேசியப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு மெல்பர்ன் நகரில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இன்று ஆக அதிகமாக 671 கிருமித்தொற்று பாதிப்புகளும் ஏழு மரணங்களும் பதிவாகின.

ஏற்கெனவே ஆறு வார முடக்க உத்தரவு நடப்பில் இருந்தாலும் சமூக பரவலும், கிருமித்தொற்று எப்படி பரவியது என்பதைக் கண்டறிய முடியாத சம்பவங்களும் விக்டோரியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

எனவே கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் விதமாக அடுத்த ஆறு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்று இரவு முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

வேலைக்குச் செல்வது மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்​கூடாது.

புதன் கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் இணையம் வழி கற்பித்தலைக் கடைப்பிடிக்கத் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!