வியன்தியன்: லாவோசில் கொவிட்-19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. லாவோசில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 4,256 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டெங்கிக் காய்ச்சலால் ஒன்பது பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தலைநகர் வியன்தியனில் ஆக அதிகமாக 974 பேருக்கு டெங்கி தொற்றியிருப்பதாக அமைச்சு நேற்று கூறியது.
தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தவரை, தாய்லாந்து, லாவோஸ், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.