ஆறு செய்தியாளர்கள் மீது மியன்மார் ராணுவம் குற்றச்சாட்டு

மியன்மாரில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்கள், படங்கள் ஆகியவற்றை வெளியிட்ட ஆறு செய்தியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

ஏபி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படச் செய்தியாளரான 32 வயது தேன் சா அவர்களில் ஒருவர்.

கடந்த சனிக்கிழமையன்று யங்கூன் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

பய உணர்வை ஏற்படுத்துவது, பொய்ச் செய்தியைப் பரப்புவது, அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களைத் தூண்டுவது ஆகியவற்றுக்கு எதிரான சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆறு செய்தியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தேன் சோவின் வழக்கறிஞர் கூறினார்.

இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோருக்கான அதிகபட்ச சிறைத் தண்டனையை இரண்டு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுக்கு உயர்த்த இச்சட்டத்தை மியன்மார் ராணுவம் கடந்த மாதம் திருத்தியது.

தேன் சா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் அவர் தமது வேலையைத்தான் செய்துகொண்டிருந்தார் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!