ஜெருசலம்: இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கும் அருகில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய போலிசாருக்கும் இடையே நேற்று கைகலப்பு மூண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவ்விடத்தில் குவிந்த இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மீது நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கற்களை வீசியதாகவும் அதற்குப் பதிலடி தரும்வகையில் இஸ்ரேலிய போலிசார் ஆர்ப்பாட்டக்
காரர்கள் மீது ஸ்டன் கிரெனேட் எனப்படும் செயலிழக்கச் செய்யும் கையெறிக் குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர் புகையும் ரப்பர் தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டில் நடந்த போரில் ஜெருசலம் நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. அது இஸ்ரேலில் ஜெருசலம் தினமாக அனுசரிக்கப்
படுகிறது.
ஜெருசலம் தினத்தை முன்னிட்டு ஜெருசலத்தில் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பாலஸ்
தீனர்களுக்கும் இஸ்ரேலிய போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரமலான் மாதத்தை முன்னிட்டு அல் அக்சா பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கூடினர். அன்று நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று கிழக்கு ஜெருசலத்தில் வன்முறை வெடித்தது. இதில் 100 பேர் காயமுற்றனர்.