ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 28 பேர் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதி காம்சட்கோவில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பலானா விமான நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏஎன்-26 என்ற அந்த விமானத்தில் ஒரு குழந்தை, நான்கு உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், நகரத் தலைவர் உட்பட 22 பேரும் 6 ஊழியர்களும் இருந்தனர்.
ஓகோட்ஸ்க் கடலை மையமாகக் கொண்டு விமானத்தைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.