பாரிஸ்: பிரான்சில் 35 ஆண்டுகளாகத் தப்பியோடிய தொடர்ந்து கொலைகளைச் செய்த ஆடவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கான தேடல் வேட்டை முடிவுக்கு வந்தது.
லெ கிரெல என்றழைக்கப்பட்டு வந்த கொலையாளியை 1980களிலிருந்து போலிசார் தேடிவந்தனர். இளம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கொன்றதாகவும் அவர் சந்தேகிக்கப்பட்டார். ஆனால் அவர் பிடிபடவில்லை. அவரின் அடையாளம் போலிசாருக்குத் தெரியவரும் நிலையில் லெ கிரெல உயிரிழந்தார், ஃபிராங்குவா வெரோவெ என்று அடையாளம் காணப்பட்ட அவர் வாடகை அடுக்குமாடி வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகவும் எழுத்துபூர்வமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் ஏஎஃப்பி ஊடக நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெரோவெ, உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரியாகவும் அதற்குப் பின்னர் போலிஸ் அதிகாரியாகவும் இருந்தவர். இறக்கும்போது அவருக்கு வயது 54.