கோலாலம்பூர்: சோதனை கட்டத்தில் இருக்கும் கொவிட்-19 மாத்திரைகளை வாங்க மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
'மெர்க் & கோ' நிறுவனத்தின் இந்த மாத்திரை, மோசமாக நோய்வாய்ப்படும் வாய்ப்புகளையும் மரணமடையும் சாத்தியத்தையும் பாதியாகக் குறைக்கக்கூடும். மாத்திரையின் பெயர் 'மொல்னுபிராவிர்'.