தைப்பே: சீனா, தான் இருப்பதை தைவானுக்கு நினைவூட்டும் வித மாக அடிக்கடி போர் விமானங்களை அனுப்பி வருகிறது.
சனிக்கிழமை அன்று தைவான் வான்வெளியில் 39 சீன கடற்படை விமானங்கள் ஊடுருவிச் சென்றன. ஆத்திரமடைந்த தைவான், பதிலடிக்குத் தயாரானது. இதனால் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
தைவானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதிதான் தைவான் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக தன்னுடைய வான்வெளி யில் சீன விமானங்கள் அத்துமீறுவது அதிகரித்துள்ளதாக தைவான் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சீனாவின் 39 விமானங்கள் நுழைந்ததும் அதற்கு எதிராக போர் விமானங்கள் இரண்டு அலை களாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சீன விமானங்களை எச்சரிக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏவுகணைத் தற்காப்பு சாதனங்களையும் தைவான் ஆயத்தப் படுத்தியிருந்தது.
சனிக்கிழமை அன்று பகலில் இருபது சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் பின்னர் அன்று இரவு 19 சீன விமானங்கள் ஊடுருவியதாகவும் தைவான் தற்காப்பு அமைச்சு மேலும் கூறியது.
பெரும்பாலான சீன விமானங்கள் ஜே-16, எஸ்யு-30 ரக போர் விமானங்களாகும்.