பெய்ஜிங்: சீனாவுடன் தைவானை 'மீண்டும் ஒன்றிணைப்போம்' என்று சீன அதிபர் ஸி ஸின்பிங் உறுதி கூறியுள்ளார்.
இருப்பினும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் கடந்த ஒரு வாரகாலமாக மோசமைடைந்துள்ள பதற்றத்திற்கு மத்தியில், ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து சீனாவின் கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீன அதிபர் ஸி ஸின்பிங், "சீனா அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது.
"தைவானின் சுதந்திர பிரி
வினைவாதம், சீனாவுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
"சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். சீனாவை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும்," என்று மென்மையாக பேசினார்.
சில மாதங்களுக்கு முன்பு தைவானைப் பற்றி பேசும்போது, எந்த முயற்சியையும் அடித்து நொறுக்குவேன் என்றும் 2019ல் தைவானைக் கைப்பற்ற தேவைப்பட்டால் படைபலத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டேன் என்று மிரட்டும் தொனியில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
சீன அதிபரின் அண்மைய பேச்சுக்குப் பதிலளித்த தைவான், வற்புறுத்துவதைக் கைவிடுமாறும் தைவானின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்கள் மட்டுமே முடிவு செய்வார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தியது.
மேலும் சீனாவின் 'ஒரு நாடு, இரண்டு ஆட்சி' முறையை தைவான் மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளதாகவும் தைவான் கூறியது.
தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள தைவான் வேண்டிய அனைத்தையும் செய்யும் என்று தைவான் அதிபர் நேற்று முன்
தினம் கூறியிருந்தார்.
அண்மைய ஆண்டுகளில் தைவானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் சீனா அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.