மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

நியூயார்க்: மருத்துவ உலகின் மைல்கல்லாக, பன்றியின் சிறு நீரகம், மனிதருக்குப் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக மூன்று நாட்
களுக்குச் பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதுடன், சிறுநீரையும் கிரியேட்டினையும் பிரித்து வெளியேற்றியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மனிதனின் ரத்தநாளங்களுடன் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திய மருத்துவர்கள், அதனை உடலுக்குள் பொருத்தாமல், மூன்று நாட்களுக்கு உடலுக்கு வெளியே வைத்து பரிசோதித்தனர்.
இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பன்றி உள்ளிட்ட விலங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 107,000 பேர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருப்பதாகவும் அவர்களில் 90,000 பேர் மாற்று சிறுநீரகத்திற்காகக் காத்து கொண்டிருப்பதாகவும் உடலுறுப்பு பகிர்வு அமைப்பு ஒன்று கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!