அதிபர் பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், மக்கள் எதிர்ப்பார்த்ததைவிட தாம் இன்னும் சிறப்பாக செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆறு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள், குறைந்த மருத்துவ காப்புறுதி கட்டணங்கள், அமெரிக்க மீட்சி திட்டம் போன்ற அம்சங்களை இந்த ஓராண்டில் தாம்
அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னர்.
அதோடு, 210 மில்லியன் அமெரிக்கர்கள் கொவிட் கொள்ளைநோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இந்த ஓராண்டில் திரு பைடனுக்கு கிடைத்துவரும் ஆதரவு சரிந்துள்ளது.
பணவீக்கம், கொவிட் கிருமிப்பரவல், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பின்னடைவு போன்றவை அதற்கு காரணம்.
இந்நிலையில், இரண்டாவது தவணைகாலத்துக்கு போட்டியிட்டால், துணை அதிபர் கமலா ஹாரிஸை மீண்டும் தம்முடைய துணை அதிபர் வேட்பாளராக நியமிப்பேன் என திரு பைடன் குறிப்பிட்டார்.
திருமதி ஹாரிஸ்க்குக் கிடைத்துள்ள ஆதரவும் இந்த ஓராண்டில் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபர் பதவியேற்று வரலாற்று சாதனை படைத்தார் திருமதி ஹாரிஸ். அதனால், மக்கள் அவர் மீது அதிக எதிர்ப்பார்ப்புகளை வைத்திருந்தனர்.
ஆனால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் எடுத்துவரும் முடிவுகளுக்கு குறைகூறல்களுக்கு எழுந்துள்ளன.