சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசிய நீர்காட்சியகத்தில் புதிய முயற்சியாக நீருக்கடியில் சிங்க நடனம் அரங்கேறியது. மீன்களும் ஆமைகளும் சுற்றி வர அவற்றுக்கு நடுவில் சிங்க நடனம் இடம்பெற்றது. கோலாலம்பூரில் உள்ள அக்வாரியாவில் உள்ள நீர்வாழ் உயிரினங்களின் தொட்டி ஒன்றில் அரங்கேறிய, கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிந்த இருவரின் சிங்க நடனம் மனதைக் கவர்ந்தது. இந்த நடனத்திற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் நீருக்கடியில் நடனமாடுவதற்கு ஏற்ப கனமற்ற லேசான ஆடைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அக்வாரியாவின் நிர்வாக இயக்குநர் டேரில் ஃபோங் சொன்னார்.
படம்: இபிஏ