ஹாங்காங்: கிருமித்தொற்று காரணமாக வெள்ளெலிகளைக் கொல்வதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போலிசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று ஹாங்காங் எச்சரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பகுத்தறிவற்றது என்றார் அதன் தலைவர் கேரி லாம்.
செல்லப் பிராணி கடை ஒன்றில் 11 வெள்ளெலிகளுக்குத் தொற்று இருப்பது தெரியவந்த பிறகு, கிட்டத்தட்ட 2,000 வெள்ளெலிகளைக் கொல்லப் போவதாக ஹாங்காங் கூறியது.