ஃபேஸ்புக் சமூகத் தளத்தின் நிறுவனரும் அதை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான மார்க் ஸக்கர்பெர்க், தமது தனிப்பட்ட சொத்தில் 24 பில்லியன் அமெரிக்க டாலர் (S$32 பில்லியன்) இன்று (பிப்ரவரி 3) இழக்கக்கூடும்.
அது நடந்தால் ஒரே நாளில் ஏற்பட்ட ஆகப் பெரிய சொத்து இழப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
அது மட்டுமல்ல, ஃபேஸ்புக் தளத்தை நடத்தும் மேட்டா நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா என்று பெயர் மாற்றப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனம், கடந்த ஆண்டு நான்காம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை அடையாததே அதற்கு முக்கிய காரணம்.
ஃபேஸ்புக் தளத்தைத் தற்போது 1.93 பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
ஃபேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துவோரின் மாதாந்திர எண்ணிக்கை அரை மில்லியன் குறைந்ததாக அறிக்கை தெரிவித்தது.
கடந்த 17 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறைந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
இதனால் அந்த நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குவிலைகள் புதன்கிழமை அன்று வெகுவாகக் குறைந்தன.
வியாழக்கிழமை பங்குப் பரிவர்த்தனை தொடங்கிய சற்று நேரத்தில் அதன் பங்குவிலைகள் குறைந்தே காணப்பட்டன.
மெட்டாவின் பங்குவிலைகள் குறைவாகவே இருந்தால், தற்போது ஏறத்தாழ 120 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் திரு ஸர்க்கர்பர்க்கின் தனிப்பட்ட சொத்து, 97 பில்லியன் டாலராகக் குறையலாம்.
அப்படி நிகழ்ந்தால், கடந்த 2015இல் இருந்து உலகின் ஆகப் பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவராக அசையாமல் இருக்கும் அவர், அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்.
மெட்டா நிறுவனம் வெளியிட்ட காலாண்டு வருவாய் அறிக்கையில், அது தன் வசம் வைத்திருக்கும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் வளர்ச்சி ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
பலர், டிக்டாக், யூடியூப் போன்ற தளங்களுக்கு மாறி வருவதாகக் கூறப்பட்டது.
மேலும், இணையத்தின் அடுத்த கட்டம் என்று கூறி அது உருவாக்கி வரும் மெட்டவர்ஸ் தளத்திலும் பிரச்சினை