அமெரிக்காவில் மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியையும் ஓமிக்ரானைக் குறிவைக்கும் பூஸ்டர் தடுப்பூசியையும் குரங்குகளிடம் செலுத்திப் பார்த்ததில், தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில் இவ்விரு தடுப்பூசிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால், ஓமிக்ரானைக் குறிவைக்கும் பூஸ்டர் தடுப்பூசி அனேகமாக தேவைப்படாது என்று அமெரிக்க அரசாங்க ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) கூறினர்.
மொடர்னா, ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் ஓமிக்ரானைக் குறிவைக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை மனிதர்களிடம் செலுத்திப் பார்க்கும் சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ள வேளையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
“இது மிகப்பெரிய நற்செய்தி. ஏனென்றால், ஏற்கெனவெ உள்ள தடுப்பூசியை நாம் மாற்றத் தேவையில்லை,” என்றார் இந்த ஆய்வை வழிநடத்திய தடுப்பூசி ஆய்வாளரான டாக்டர் டேனியல் டொவெக் கூறினார்.