உக்ரேன் நிலவரம் குறித்து தங்குதடையின்றி ஆறு மொழிகளில் பேசி அசத்திய நிருபர்

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அதிகரித்துவரும் பதற்றம் குறித்து அண்மைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் மக்களின் கவனம் செய்தி ஒளிவழிகள் பக்கம் திரும்பியுள்ளது.

திறமையுடைய செய்தியாளர்கள், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அந்த வகையில், பல மொழிகளில் ஆற்றல் உடைய நிருபர் ஒருவர், உக்ரேன் நிலவரம் குறித்து தங்குதடையின்றி ஆறு மொழிகளில் பேசியிருப்பது இணையவாசிகளைப் பிரம்மிக்க வைத்துள்ளது.

உக்ரேனியத் தலைநகர் கீவில் இருந்து செய்தி வழங்கிய இந்த நிருபர் ஆங்கிலம், ஸ்பானிய, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஜெர்மானிய, லக்சம்பர்க் நாட்டு மொழிகளில் சரளமாக பேசினார்.

இவர் பேசுவதைக் காட்டும் காணொளி ஒன்று டுவிட்டரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 21) பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை அது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஏபி செய்தி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஃபிலிப் கிரவ்தர் எனும் இந்த நிபுணர், லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்க அரசதந்திரம், வெளிநாட்டுக் கொள்கை, அரசியல், நடப்பு விவகாரம் உள்ளிட்டவை குறித்து இவர் செய்தி வழங்கி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!