இங்கிலாந்தின் எலிசபெத் அரசியாரைவிட பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியிடம் இரட்டிப்பு அதிகமான சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி அந்நிறுவனத்தின் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க எலிசபெத் அரசியாரிடம் 460 மில்லியன் டாலர் சொத்து உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் வசித்து வரும் திருவாட்டி அக்ஷதா மூர்த்தி இதுரை அந்நாட்டுக்கு வருமானவரி செலுத்தாததால் அவர் கணவர் ரிஷி சுனாக்குக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்கிறது.
பிரிட்டிஷ் பிரதமராகும் அவரது கனவு இனி கைகூடும் என்பதும் கேள்விக்குறியே.
பிரிட்டனில் வசித்தாலும் அக்ஷதா மூர்த்தி இந்தியக் குடிமகள் ஆவார். அதனால் வெளிநாட்டில் பெறும் வருமானத்துக்கு அவர் சட்டப்படி பிரிட்டனில் வரி செலுத்தத் தேவையில்லை.
ஆனால் பிரிட்டனில் விலைவாசி உயர்ந்துவரும் நிலையில் நிதி அமைச்சரின் குடும்பம் சலுகைகளை அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
பிரிட்டிஷ் எதிர்த்தரப்பு தொழிலாளர் கட்சியும் மிதவாத ஜனநாயகக் கட்சியும், திரு ரிஷி சுனாக் அமைச்சருக்கு உரிய சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளன.
திரு சுனாக் சட்டத்தை மீறாதபோதும் வெளிப்படையாக செயல்படல்லை என்று அவை கூறுகின்றன.
சட்டப்படி குற்றம் புரியவில்லை என்றபோதும் கணவருக்குப் பிரச்சினையைத் தவிர்க்க வருமான வரியைச் செலுத்த அக்ஷதா மூர்த்தி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுக்கான வரியையும் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அவரது அறிவிப்பால் பிரச்சினை ஓயவில்லை.
கடந்த பல ஆண்டுகளுக்கும் சேர்த்து அக்ஷதா பல மில்லியன் டாலர் வரியைச் செலுத்த வேண்டும் என்று இப்போது எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.