சீனாவின் ஷங்ஹாய் நகரின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) பொதுமுடக்கம் தளர்த்தப்படுகிறது.
அங்கு உச்ச எண்ணிக்கையாக 25,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் இன்று பதிவு செய்யட்டபோதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு மேல் தொற்றுச் சம்பவங்கள் ஏற்படாத வட்டாரங்களில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஷங்ஹாயின் 25 மில்லியன் வாசிகளில் சிலர் இதன்வழி நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.
மூன்று வாரத்துக்கு மேல் நீடித்த கடுமையான பொது முடக்கத்தின்போது ஷங்ஹாய் வாசிகள் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பெற மிகவும் சிரமப்பட்டனர்.
பொதுமுடக்கத்தால் அவதிப்பட்ட ஷங்ஹாய் வாசிகள் காணொளிகள் தங்கள் வீடுகளிலிருந்து கத்திக் கூச்சலிடும் காணொளிகள் இணையத்தில் பரவின.
மேலும், பொதுமுடக்கத்தை எதிர்த்து சிலர் உள்ளூர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின.
இவ்வேளையில் சீனாவின் உற்பத்தித் துறை மையமான குவாங்ஸோ நகரம் பெரும்பாலானோர் வருவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் அந்நகரத்தில் 23 பேருக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தொற்றுப்பரவலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா, அங்கு பொது முடக்கத்தை இதுவரை அறிவிக்கவில்லை.