தொற்று எண்ணிக்கை உச்சத்தை எட்டியபோதும் ஷங்ஹாய் நகரில் பொதுமுடக்கத்தை தளர்த்தும் சீனா

சீனாவின் ஷங்ஹாய் நகரின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) பொதுமுடக்கம் தளர்த்தப்படுகிறது.

அங்கு உச்ச எண்ணிக்கையாக 25,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் இன்று பதிவு செய்யட்டபோதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேல் தொற்றுச் சம்பவங்கள் ஏற்படாத வட்டாரங்களில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

ஷங்ஹாயின் 25 மில்லியன் வாசிகளில் சிலர் இதன்வழி நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.

மூன்று வாரத்துக்கு மேல் நீடித்த கடுமையான பொது முடக்கத்தின்போது ஷங்ஹாய் வாசிகள் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பெற மிகவும் சிரமப்பட்டனர்.

பொதுமுடக்கத்தால் அவதிப்பட்ட ஷங்ஹாய் வாசிகள் காணொளிகள் தங்கள் வீடுகளிலிருந்து கத்திக் கூச்சலிடும் காணொளிகள் இணையத்தில் பரவின.

மேலும், பொதுமுடக்கத்தை எதிர்த்து சிலர் உள்ளூர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின.

இவ்வேளையில் சீனாவின் உற்பத்தித் துறை மையமான குவாங்ஸோ நகரம் பெரும்பாலானோர் வருவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் அந்நகரத்தில் 23 பேருக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை தொற்றுப்பரவலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா, அங்கு பொது முடக்கத்தை இதுவரை அறிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!