உலகளவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 மில்லியனைத் தாண்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுவே உண்மையான எண்ணிக்கையென நிறுவனம் தெரிவித்தது. முன்னதாக இந்த எண்ணிக்கை ஐந்து மில்லியன் என்று மதிப்பிடப்பட்டது.
சென்றாண்டு நிலவரப்படி 14.9 மில்லியன் பேர் கிருமித் தொற்று காரணங்களால் மாண்டதாகக் கூறப்பட்டது. இதில் நேரடி தொற்றுப் பாதிப்பால் 5.4 மில்லியன் பேர் உயிரிழந்தனர். மருத்துவ சிகிச்சை பெற இயலாதவர்கள், தொற்றுப் பாதிப்பால் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் மரணங்களையும் உலக சுகாதார நிறுவனம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதால், எண்ணிக்கை 15 மில்லியனை எட்டியுள்ளது.
சில நாடுகளில் இறப்பு விகிதத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக நிறுவனம் கூறுகிறது. உதாரணத்திற்கு இந்தியா மரணங்களைப் பாதியாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 4.7மில்லியன் பேர் கொவிட்-19 தொற்றால் மடிந்ததாக நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இந்த எண்ணிக்கை 480,000 மட்டுமே என்கிறது.
இந்திய அளித்துள்ள புள்ளி விவரங்களை நிறுவனம் இன்னும் முழுமையாக ஆராயவில்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ள எண்ணிக்கையை இந்தியா மறுத்தவருகிறது.