விமான எரிவாயு விலைகள் அளவுக்கு அதிகமாக ஏறிவிட்டதால் நைஜீரியா அதன் விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது.
எரிவாயு விலையேற்றத்தால் விமானச் சேவைகளை நிறுத்தி இருக்கும் முதல் நாடு அது.
விமான நிறுவனங்கள் அடுத்த அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் உள்ள விமானச் சேவைகளை நிறுத்தும் என்று விமான நிறுவனங்களின் சங்கம் கூறியது.
எரிவாயுக்கான அதிகச் செலவுகளை நான்கு மாதங்களாக ஏற்றுக்கொண்டதாகவும் இனி அப்படிச் செய்ய முடியாது என்றும் அவை கூறின.
மொத்தம் 23 விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளை நிறுத்த உள்ளன.
ஆனால் இபொம் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம் ஒன்று மட்டும் சேவைகளைத் தொடரப் போவதாகக் கூறியது.
வாடிக்கையாளர்களிடத்தில் தனக்கு பொறுப்பு உள்ளதாக அது சொன்னது.
ரஷ்ய உக்ரேன் போரின் தாக்கத்தால் ஒரு லிட்டர் எரிவாயு மும்மடங்குக்கும் மேல் அதிகரித்து 700 நைராவாக (2.33 சிங்கப்பூர் வெள்ளி) ஆனது.
ரஷ்ய உக்ரேன் போரைத் தவிர, சீனாவும் அது ஏற்றுமதி செய்யும் எண்ணெயைக் குறைத்துள்ளது.
அதே நேரம் விமானப் பயணங்கள் அடுத்த சில மாதங்களில் அதிகமாக உள்ளதால் விமான எரிவாயுவுக்கான உலகளாவியத் தேவை 30 விழுக்காட்டுக்கும் மேல் உயரவுள்ளது.
நாள் ஒன்றுக்கு ஆறு மில்லியன் பீப்பாய் விமான எரிவாயு தேவைப்படும் என்று புளும்பெர்ன் என்ஈஎஃப் முன்னுரைத்தது.